Total Pageviews

Friday, January 30, 2015



                              30-1-15 அன்று கடலூரில்
BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்  

சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக

தமிழ் மாநில சங்கங்கள் நடத்தும்
மாநிலம் தழுவிய சிறப்பு   கருத்தரங்க காட்சிகள்
                         









                                          S.SIVAGURUNATHAN, DS / NFTE

Thursday, January 29, 2015



செய்திகள்
  • கனரா வங்கியுடன் BSNL  ஊழியர்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்  நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தம் 22/01/2016 வரை அமுலில் இருக்கும். தற்போதைய தனிநபர்க்கடன் வட்டி விகிதம் 12.95 சதம் ஆகும்.
  • ===========
  • 01/10/2000க்கு முன் TSM ஆகப்பணி புரிந்து அதன் பின் BSNLலில் பணி நிரந்தரம் பெற்ற தோழர்கள் DOT  ஊழியராக சில இடங்களில் கருதப்படவில்லை. அத்தகைய தோழர்களை  DOTயில் இருந்து BSNLலில் பணி நிரந்தரம் பெற்ற  ஊழியர்கள் என்னும் நிலைக்கு அங்கீகரிக்க வேண்டும் என JCM தேசியக்குழுவில் பிரச்சினை எழுப்பப்பட்டது. தற்போது இது குறித்து டெல்லி நிர்வாகம் தேவையான விவரங்களை மாநில நிர்வாகங்களிடம் கேட்டுள்ளது.
  • ============
  • BSNL விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டுப்பொருட்கள் வைப்பதற்கான உறை KIT MONEY  வாங்குவதற்கான தொகை ரூ.2000/=ல் இருந்து 2500/= ஆகவும், நாடுகளுக்கிடையேயான போட்டியாளர்களுக்கு ரூ.2500/= லிருந்து ரூ.3000/=மாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
  • =============
  • JCM தேசியக்குழு நிலைக்குழு STANDING COMMITTEE  கூட்டம் 10/02/2015 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  NFTE சார்பாக தோழர்கள்.இஸ்லாம் அகமது,சந்தேஷ்வர்சிங் மற்றும் BSNLEU சார்பாக தோழர்கள்.அபிமன்யு, ஸ்வபன் சக்கரவர்த்தி,  பல்பீர் சிங் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
  • ==============
  • IQ ஆய்வு இல்லங்களில் தங்குவதற்கான கட்டணத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. பணி நிமித்தமாக தங்குவோருக்கு பெருநகரங்களில் ரூ.40/=ம் ஏனைய ஊர்களில் ரூ.25/=ம்,  சொந்தப்பணி நிமித்தமாக தங்குவோருக்கு  பெருநகரங்களில் ரூ.150/=ம் ஏனைய ஊர்களில் ரூ.75/=ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • ===============
                                                        S.SIVAGURUNATHAN, DS / NFTE

ஜனவரி 30

காந்தி மகான்..

நினைவு தினம் 

மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகங்களை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: அக்டோபர் 02, 1869
இடம்: போர்பந்தர், குஜராத் மாநிலம், இந்தியா
பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர் 
இறப்பு: ஜனவரி 30, 1948
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02  ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
இந்திய விடுதலைப் போராட்டதில் காந்தியின் பங்கு
இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமையை இயக்கத்தினை 1922  ஆம் ஆண்டு தொடங்கினார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது. இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.
காந்தியின் தண்டி யாத்திரை
1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது. ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது.
இறப்பு
அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் (அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே) புது தில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக்கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும்

                                           S.SIVAGURUNATHAN, DS / NFTE



                                            MADURAI DISTRICT UNION 
                  
     OPENING AT CSC, TALLAKULAM, CTO COMPOUND 
  
                                               24.01.2015


























                            S.SIVAGURUNATHAN, DS / NFTE

Tuesday, January 27, 2015


 மதுரை மாவட்டம் 
                                             செயற்குழு 24.01.2015  புகைப்படங்கள் 


















                                  


































































































































S.SIVAGURUNATHAN ,DS / NFTE



Monday, January 26, 2015


BSNL நிறுவனம் காக்க... தேசம் காக்க...

கடலூரில்... நடைபெறும்... மாநிலம் தழுவிய... 

சிறப்புக் கருத்தரங்கத்திற்கான... பதாகைகள்...











கருத்தரங்கில்... பங்கேற்போம்...

கண்ணின் இமை போல... 

நம் நிறுவனத்தை... பாதுகாப்போம்...


                    S.SIVAGURUNATHAN, DS / NFTE

Sunday, January 25, 2015

அனைவருக்கும் 

குடியரசு தின 

நல்வாழ்த்துக்கள்


இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.
ஆங்கிலேயரின் ஆட்சி
ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1948 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைதல்
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.
இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்
1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்தியக் குடியரசு தினம்
1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு,  இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
குடியரசு என்பதன் பொருள்
குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.
குடியரசு தினக் கொண்டாட்டம்
இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய  மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.
இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.
வாழ்க பாரதம்!!!! ஜெய்கிந்த்!!!
                                                                         S.SIAVGURUNATHAN, DS / NFTE

Saturday, January 24, 2015



                              GPF  தகவல்
                                                   
தமிழ் மாநிலம் முழுவதும் உள்ள 18 (CGM அலுவலகம் உட்பட)
தொலைத் தொடர்பு மாவட்டங்களில் இருந்து GPF தொகை 
பெறுவதற்கு விண்ணப்பித்த ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகளின் எண்ணிக்கை 5660 பேர்.

இதற்கான நிதியினை நமது மத்திய, மாநில
சங்கத்தின் தொடர் முயற்சியால் முழுமையாக  21-01-2015 
அன்று நமது மத்திய நிர்வாகம் ஒதுக்கீடு செய்தது. 

இந்நிலையில்... நமது மாநில நிர்வாகம் GPF தொகை
பெறுவதற்கு விண்ணப்பித்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 
22-01-2015 அன்று பணப்பட்டுவாடா செய்யப்படும்
என்று நமது மாநில சங்கத்திடம் தெரிவித்தது.

ஒரு சில மாவட்டத்தில் ஏற்பட்ட ஊழியர் இறப்பு காரணமாக 
அவர்கள் குடும்பத்திற்கு உடனடியாக சேமநலநிதியிலிருந்து நிதி வழங்க நிர்வாகம் முற்பட்ட போது புதிய மென்பொருள் 
ERP அமுலாக்கத்தின் குளறுபடி காரணமாக 22-01-2015 அன்று GPF 
தொகை வங்கிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

நமது மாநில சங்கத்தின் தொடர் முயற்சியால்...
மாநில நிர்வாகத்தால் ERP குளறுபடி சரி செய்யப்பட்டு 23-01-2015 
இன்று மாநிலம் முழுவதும் GPF தொகை பெறுவதற்கு 
விண்ணப்பித்த 5660 ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்காண 
தொகை 17 கோடியே 74 லட்சம் ரூபாய் வங்கிக்கு
அனுப்பப்பட்டுள்ளது என்று மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

25-01-2015 (ஞாயிற்று கிழமை) மற்றும் 26-01-2015 (குடியரசு தினம்) விடுமுறை என்பதால் முதன்மை கணக்கு அதிகாரி 
(Chief Accounts Officer) திரு.கதிரேசன் அவர்கள் வங்கிக்கு 
அனுப்பப்பட்டு 24-01-2015 க்குள் ஊழியர் மற்றும்
அதிகாரிகளுக்கு GPF தொகை பட்டுவாடா செய்திட 
மாநில நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

ERP... நிதி நெருக்கடி... உள்ளிட்ட... பல்வேறு பிரச்சனைகளின் 
தாக்கத்தில் இருந்து ஊழியர்களின் பிரச்சனைகளை
பாரம்பரிம் குன்றாமல் காக்க போராடி வரும் 
நமது மாநில சங்கத்தின் மரபை போற்றுவோம்.

அறிந்திட முடியாத......! 
பல செய்திகளை... பல தகவல்களை... பல புள்ளி விவரங்களை... கடைநிலை தொண்டன் கூட அறிந்திட செய்திடும். 
நமது மாநில செயலரின் மரபை போற்றுவோம்.

இந்நிலை... எந்நிலை... ஆனாலும் 
ஊழியர் நலன் நிலைக்காக போராடி வரும் 
நமது மாநில சங்கத்தின் மரபை போற்றுவோம்...! போற்றுவோம்...!! போற்றுவோம்...!!!
   

                                          S.SIVAGURUNATHAN, DS / NFTE / MADURAI

Friday, January 23, 2015





ERP யில் password reset செய்ய மாநில நிர்வாகம் வழிகாட்டியுள்ளது.

मुख्य महाप्रबंधक का कार्यालय / O/o Chief General Manager,
तमिलनाडु परिमंडल / Tamilnadu Circle,
प्रशासनिक बिल्डिंग, / Administrative Building,
16 A , ग्रीम्स रोड / Greams Road, चेन्नै / Chennai 600 006
स./No. IT/109-5/ERP-Mantis/2014-15/22 दिनांक /Dated at चेन्नै/Chennai-6 the 13/01/2015.

To
PGM(F)/Sr.GM(NWP-CM)/All Vertical GMs in CGM Office/All Head of SSAs/ GM(NWO-CM),
Coimbatore/ GM (NWO-CM), Nodal Center, Trichy/PCE(Civil)/PCE(Electrical)/Chief Architect.
Sub : Resetting of password of SAP and ESS - Reg
The following officers are nominated and Authorization given to reset the password / for SAP and ESS users pertaining to Tamilnadu Circle
Name(Sri/Smt)
Designation
Mobile
Email id
Copy mail
Assigned SSAs
1.
R.Subramanian
DGM(IT)
9443100853
rsmanian95@yahoo.co.in
cksundar55@gmail.com
Thanjavur, Trichy, Tirunelveli, Tuticorin, Vellore, Virudhunagar
2.
C.K.Sundaram
AGM(IT)
9486100400
cksundar55@gmail.com
kankeshsde@bsnl.co.in
Circle office, Coimbatore, Coonoor, Cuddalore, Dharmapuri, Erode
3.
P.S.Kankesh
SDE(ERP)
9486101770
kankeshsde@bsnl.co.in
rsmanian95@yahoo.co.in
Karaikudi, Kumbakonam, Madurai, Nagercoil, Pondy, Salem
4.
Ramya
(For ESS users)
SDE(HRD)
9486100360
sdehrdtn@gmail.com
--
All the ESS users of TN Circle.
The request may be sent to the above officers through the SSA BASIS SPOCs. It may also be noted that Civil, Electrical and CMTS wing users are treated as users of the SSAs to which they are attached. The request may be intimated through email to the above mentioned officers only, by mentioning the Pernumber, Name and Designation and error message clearly.
उप महाप्रबंधक (ई आर पी) /Deputy General Manager (ERP), मुख्य महाप्रबंधक का कार्यालय/ O/o Chief General Manager,
तमिलनाडु परिमंडल / Tamilnadu Circle
                           चेन्नै / Chennai -600 006.
Copy To:
1.   All BASIS SPOCs/ SSA ERP Over all Co-ordinators in TN Circle for infn & n/a.
2.  Above Authorised officers for infn & n/a.


                                                                                                           S.SIVAGURUNATHAN, DS / NFTE