Total Pageviews

Wednesday, January 21, 2015



செய்திகள் 


GPF மற்றும் திருவிழா முன் பணத்திற்கு (Festival advance) 
தேவையான (ரூபாய். 20 கோடி) நிதியை நமது மத்திய நிர்வாகம் 
20-01-2015 அன்று ரூபாய்.16 கோடியையும் 21-01-2015 இன்று
ரூபாய்.கோடியையும் ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில்...GPF தொகைக்கு விண்ணபித்த தோழர்களுக்கு 
22-01-2015 அன்றும் திருவிழா முன் பணத்திற்கு
(Festival advance) விண்ணபித்த தோழர்களுக்கு 23-01-2015  
அன்றும் பணப்பட்டுவாடா செய்யப்படும் என்று
மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

GPF மற்றும் திருவிழா முன் பணத்திற்கு தேவையான நிதியை... 
போராடி... பெற்றுதந்த... நமது மத்திய... மாநில...

சங்கத்திற்கு நமது நன்றியை உரித்தாக்குகிறோம்...

===========

BSNL  ஊழியர்களுக்கு பல்வேறு கடன் வழங்குவதற்காக 
அலகாபாத் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒப்பந்தம் 13/01/2018 வரை மூன்று ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும்.

===========
குடும்ப ஓய்வூதியம் FAMILY PENSION திருமணமாகாத மகன் மகளுக்கு அவர்களின் திருமணம் வரை வழங்கப்பட்டு வந்தது. அவ்வாறு ஓய்வூதியம் பெறுபவர்கள் உடல் ஊனமுற்றவர்களாகவோ, மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவோ, விதவையாகவோ  இருந்தால் அவர்களது திருமணத்திற்கு பின்னும் அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம் என அரசு உத்திரவிட்டுள்ளது. அத்தகையவர்கள் தங்களுக்கு வருமானம் ஏதும் இல்லை என வருடந்தோறும் சான்றிதழ் வழங்க வேண்டும்.

                                                      ===========

01/01/2015 முதல் 2.2 சதம் உயர்வு பெற்ற 
IDA உத்திரவு BSNL நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது

                                                      =========== 

                                                                 S.SIVAGURUNATHAN , DS/NFTE


No comments:

Post a Comment