Total Pageviews

Thursday, May 28, 2015


மந்திரி சூளுரை 

BSNL... MTNL நிறுவனங்களை 
உயர.. உயர.. வைப்போம்..

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...

மோடி அரசின் ஓராண்டு நிறைவையொட்டி...
நமது இலாக்கா மந்திரி திருவாய் மலர்ந்தருளியுள்ளார்...

BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் வளர்ச்சியில் 
ஆறேழு ஆண்டுகளை காங்கிரஸ் வீணடித்து விட்டது.
நாங்கள் ஓராண்டை மட்டுமே வீணாக்கியுள்ளோம்...

செயல்பாடு மிக்க வாஜ்பாய் ஆட்சியில் 
பல கோடி லாபம் ஈட்டிய BSNL நிறுவனம்...
செல்வாக்கு மிக்க எங்கள் ஆட்சியில் 
செயலிழந்த நிலையில் இருப்பது வருத்தம் அளிக்கிறது...

கடந்த ஓராண்டாக...
இதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதால்..
என்னால் தொழிற்சங்கப்பிரதிநிதிகளைக் கூட சந்திக்க முடியவில்லை...

BSNL மற்றும் MTNL நிறுவனங்களை...
ஒரு வழி பண்ணிய பின்புதான்..
நான் ஊழியர் பிரதிநிதிகளை சந்திப்பேன்..

இது சம்பந்தமாக எங்கள் அரசு..
அம்பானியுடனும்.. 
அதானியுடனும்...
அதி தீவிரமாக ஆலோசித்து வருகிறது...

பிரதமர் வெளிநாட்டில் இருந்து...
5 ஆண்டுகள் கழித்து இந்தியா 
திரும்பும்போது நிச்சயம் BSNL நிறுவனத்திற்கு 
திருப்புமுனை அமையும்...

அகண்ட பாரத கண்டம் வாழ்க.. வாழ்க..

S . சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment