Total Pageviews

Wednesday, May 06, 2015

DOTயுடனான பேச்சுவார்த்தை 



01/05/2015 அன்று நமது கூட்டமைப்புத்தலைவர்கள் 

DOT  செயலரை சந்தித்து நமது போராட்டக் 

கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தினர். 


இந்த பேச்சுவார்த்தையில் DOT செயலர்
உயர்திரு. ராகேஷ்கார்க், 
தொலைத்தொடர்பு சிறப்புச் செயலர் 
உயர்திரு. செல்வி ரீடா டியோடியா, 
தொலைத்தொடர்பு இணைச்செயலர் 
உயர்திரு. உமாசங்கர், 
உறுப்பினர் (நிதி) உயர்திரு. செல்வி அன்னி மோரஸ், 
உறுப்பினர் (சேவைகள்) உயர்திரு. N.K.குப்தா ஆகியோரும்,
நமது நிர்வாகத்தின் சார்பில்...
CMD உயர்திரு. அனுபம் ஸ்ரீவத்சவா, 
நிர்வாக இயக்குனர் (நிதி) உயர்திரு. செல்வி சுஜாதா ராய்,
Sr.GM (மனித வளம்) உயர்திரு. ஹமீம் அக்தர் ஆகியோரும்               
கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

DOT சார்பாக கீழ்க்கண்ட உறுதிமொழிகள் தரப்பட்டுள்ளன.
  • 6700 கோடி அலைவரிசைக் கட்டணத்தில் உடனடியாக 800 கோடி திருப்பித்தரப்படும். பாக்கித்தொகை அடுத்த வருட வரவு செலவு அறிக்கையில் வைக்கப்பட்டு பரிசீலிக்கப்படும்.
  • USO நிதியில் இருந்து வரவேண்டிய 2012-13 ஆண்டிற்கான ADC கட்டணம் 1250 கோடி உடனடியாக வழங்கப்படும்.
  • சரியான கணக்கு வழக்கு இல்லாமல் BSNLலிடம் இருந்து கூடுதலாக பிடித்தம் செய்யப்பட 7000 கோடி வருமான வரியை திருப்பித்தருவதற்கான பணி வேகமாக நடைபெற்று வருகின்றது. விரைவில் இந்தப்பணம் திருப்பி அளிக்கப்படும்.
  • ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குதல் சாதகமாக விரைந்து பரிசீலிக்கப்படும்.
  • ஊதிய திருத்தம் மேற்கொள்ளப்படும்போது  ஓய்வு பெறும் ஊழியர்களின்  ஓய்வூதிய திருத்தம் செய்வது பற்றி அரசுடன் கலந்தாலோசிக்கப்படும்.
  • MTNL - BSNL இணைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
  • BSNLக்கு சொந்தமான சொத்துக்கள் விரைவில் BSNL வசம் ஒப்படைக்கப்படும். BSNL கட்டிடத்தில் இயங்கி வரும் DOT அலுவலகங்களுக்கான வாடகையை DOT  வழங்குவது  பற்றி பரிசீலிக்கப்படும்.
  • ஓய்வூதியப் பங்களிப்பு PENSION CONTRIBUTION வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடுவது பற்றி பரிசீலிக்கப்படும்.
ஆக மொத்தத்தில் DOTயுடனான பேச்சுவார்த்தை 
ஓரளவு பலனளிப்பதாக கருதப்பட்டுள்ளது.


S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment