Total Pageviews

Thursday, October 08, 2015



செய்திகள் 



தமிழகத்தில் 02/06/2013 அன்று நடந்த JTO இலாக்காத் தேர்வில்

ST காலியிடங்களில்  7 தோழர்கள் வெற்றி பெற்றதாக  தமிழக 

நிர்வாகம் அறிவித்துள்ளது. வெற்றி பெற்ற தோழர்களுக்கு நமது 

வாழ்த்துக்கள்.


                   09/10/2015 முதல்  GPF நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என 

                                               கூறப்பட்டுள்ளது.



பதவி பெயர் மாற்றத்தில் அதன் குழுவின் 

பரிந்துரை  அமுல்படுத்தப்பட வேண்டும் என நமது மத்திய 

சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

திறந்த நிலைப்பல்கலைக் கழகங்கள் மூலம் பெறப்பட்ட +2 

படிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நமது 

மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.


JTO ஆளெடுப்பு விதிகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு 

விரைவில் உத்திரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



மதுரையில் சாதிச்சான்றிதழ் பிரச்சினையில் பணி நீக்கம் 

செய்யப்பட்ட தோழர்.அந்தோணிச்சாமி, SS அவர்களை மீண்டும் 

பணியில் அமர்த்த மத்திய சங்கமும் தமிழ் மாநில 

சங்கமும்  முயன்று வருகின்றன.


ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பை 

அமுல்படுத்துவது சம்பந்தாகவும், தனி  TOWER CORPORATION 

அமைப்பது சம்பந்தமான பிரச்சினையில் அரசால் 

அமைக்கப்படும் அமைச்சர்கள் குழுவில் BSNL சார்பாக 

அதிகாரிகளை சேர்த்திடக் கோரியும்   DOT செயலரை நமது 

கூட்டமைப்புத்தலைவர்கள் சந்தித்து கோரிக்கை 

விடுத்துள்ளனர்.


TM பதவிகளில் ST  பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை 

நிரப்புவதற்கு நமது சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.



அடி மட்ட ஊழியர்களின் STAGNATION - ஆண்டு 

உயர்வுத்தொகை தேக்க நிலை  பற்றி விரைந்து முடிவெடுக்க 

நமது சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.


S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment