Total Pageviews

Sunday, January 03, 2016

சிவப்பு சிந்தனைக்கு... செவ்வணக்கம்...
தோழர். A.B.பரதன் மறைவிற்கு... 
நமது அஞ்சலி...
(25.09.1925 - 02.01.2016)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொது செயலாளரும், 
AITUC சங்கத்தின் முன்னாள் பொது செயலாளருமான...,
தோழர். A.B. பரதன் தனது 92-வது வயதில் உடல் 
நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள GB பந்த்
மருத்துவமனையில் 02-01-2016 அன்று இரவு 08-13 
மணிக்கு உயிரிழந்தார். 

1925 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி வங்காள தேசத்தில் 
உள்ள சில்கெட்டில் பிறந்தார். சமத்துவ இந்தியாவை படைக்க மாணவ
பருவத்திலிருந்தே போராடி வந்தவர். வங்களாதேசம் பூர்வீகம்
என்றாலும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தான் 
இவரது பொது மற்றும் அரசியல் வாழ்க்கைக்கு 
அடித்தளம் அமைத்த இடம். 

1957 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில சட்ட மன்றத்திற்கு
தேர்ந்தெடுக்கப்பட்டவர். தோழர்.இந்திரஜித் குப்தா அவர்களுக்கு 
பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலராக 
12 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். 
ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் 
எழுதி குவித்தவர்.

பொது வாழ்வில் நொடி தோரும் தூய்மையை நூற்றவர். வகுப்பு 
வாத மதவெறிக்கு எதிராக தொடந்து போராடியவர். அடக்கப்பட்ட 
மக்கள் மற்றும் தொழிலாளி வர்க்கத்திற்காக தனது இறுதி 
முச்சு வரை உறுதியாக போராடியவர்.

தோழர். பரதனின் மறைவு இந்திய தொழிற்சங்க இயக்கத்திற்கும்
உழைப்பாளி மக்களுக்கும் பேரிழப்பாகும். 

அவரது மறைவிற்கு... மதுரை மாவட்ட NFTE சங்கம்... 
தனது அஞ்சலியை உரித்தாக்குகிறது.

செவ்வணக்கம்...! சிவப்பு சிந்தனைக்கு...!! செவ்வணக்கம்...!!!  
செவ்வணக்கம்...! சிவப்பு மனிதனுக்கு...!! செவ்வணக்கம்...!!!

S.சிவகுருநாதன்,மாவட்ட செயலர்  

No comments:

Post a Comment