Total Pageviews

Saturday, April 22, 2017

நேர்மை வளையுதடா

ஏப்ரல் 21 
பாவேந்தர் பாரதிதாசன்
நினைவு நாள்…

பாழாய்ப்போகும் நேர்மை பற்றி…
பாவேந்தரின் கவிதை….

நேர்மை வளையுதடா

ஊழலே தொழிலாச்சு
உலகம்
கொள்ளையடிப்பவர்க்கு நிழலாச்சு

வறுமைக்கு மக்கள் நலம் பலியாச்சு ..
எங்கும் வஞ்சகர் நடமாட வழியாச்சு..

சோகச் சுழலிலே...
ஏழைச் சருகுகள் சுற்றுதடா...
கண்ணீர் கொட்டுதடா

மோசச் செயலாலே...
முன்னேற்றம் கண்டோரின்..
ஆசைக்கு நீதி இரையாகுதடா ..

அன்பை அதிகார வெள்ளம்
கொண்டு போகுதடா 

பழந்துணி அணிந்தாலும்
பசியாலே இறந்தாலும்
பாதை தவறாத பண்பு உள்ளம்...

இருந்த நிலை மறந்து
இழுக்கான குற்றம் தன்னைப்
புரிந்திடலாமென்று துணியுதடா 

நேர்மை
பொல்லாத சூழ்நிலையால்
வளையுதடா

No comments:

Post a Comment