Total Pageviews

Thursday, August 31, 2017

31/08/2017 பணிநிறைவு பெறும்
NFTE முன்னாள் மாநிலப்பொருளர்
NFTCL அகில இந்தியத்துணைத்தலைவர்..
புதுவை மண்ணின் மைந்தன்
அருமைத்தோழர்...
K.அசோகராஜன்
அவர்களின்...
இலாக்காப்பணி நிறைவுறட்டும்
இயக்கப்பணி என்றும் தொடரட்டும்...
 வாழ்க  பல்லாண்டு  வாழ்க அன்புடன் வாழ்த்தும்
NFTE – BSNL
மதுரை  மாவட்டச்சங்கங்கம்




இரவு நேர இலவச அழைப்பு

BSNL வாடிக்கையாளர்களுக்கும்
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது போல
BSNLலில் பணிபுரியும் ஊழியர்களுக்கும்...
GROUP ‘B’ அதிகாரிகளுக்கும்...
இரவு நேர இலவச அழைப்பு வசதி அவர்களின் இல்லங்களில் உள்ள  தொலைபேசிகளில் வழங்கப்படும்
என CORPORATE அலுவலகம்  29/08/2017 அன்று உத்திரவிட்டுள்ளது.
மிக நீண்ட நாட்களாக எழுப்பப்பட்ட மேற்கண்டகோரிக்கை
அகில இந்திய JCMல் விவாதிக்கப்பட்டு முடிவுகள்
மேற்கொள்ளப்பட்டு தற்போது உத்திரவிடப்பட்டுள்ளது.

JCM ஊழியர் தரப்பிற்கு நமது நன்றிகள்...
             
        மதுரை மாவட்ட நிர்வாகத்தின் பாரபட்சமான போக்கை மாற்றிட மாவட்டச்சங்கம்  30/8/2017 நடத்திய போராட்டத்தின் நியாயத்தை CGM அவர்களின் கவனத்திற்கு மாநிலச்சங்கம் கொண்டு சென்றதுமாவட்ட நிர்வாகத்திற்கு மாநில நிர்வாகம் உரிய வழிகாட்டுதலை தருவதாகஉள்ளதுஇந்த அடிப்படையில் நமது போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Sunday, August 27, 2017

போராட்ட விளக்க கூட்டம் 

ஊழியர் மாற்றலில் பாராபட்சம் காட்டும் 
மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து
   30-08-2017 புதன் கிழமை நடைபெறும்    ஆர்ப்பாட்டத்திற்கான விளக்க கூட்டம்.


இடம் :- 
தல்லாகுளம் CSC மனமகிழ் மன்றம் 
28.08.2017  மாலை 5.3 மணியளவில் 
போராட்ட விளக்க கூட்டம் நடைபெறும்.

மதுரை GM அலுவலக கிளை ,

GM [ DEVLOPMENT] அலுவலக கிளை,

CSC TKM அலுவலக கிளை

NORTH - TKM அலுவலக கிளை

CTMX -TKM அலுவலக கிளை

DE RM  மதுரை அலுவலக கிளை,



அனைத்து  கிளை உறுப்பினர்களும், கிளை

 செயலர்களும்  அனைவரும்  தவறாமல் 

கலந்து கொள்ளுங்கள் தோழர்களே


Saturday, August 19, 2017

வீரத்திருமகன்
ஆகஸ்ட்... 18
அருமைத்தலைவர் நேதாஜி
மறைக்கப்பட்ட நாள்
சுபாஷ் சந்திர போஸ்….
நீங்கள் இரத்தத்தைக் கொடுங்கள்…
நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகின்றேன்…
என்று முழங்கிய வீரத்திருமகன்…

ஆயுதம் ஏந்தாமல் விடுதலையை
அடைய முடியாது என்ற
அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்…

எல்லாம் கிடைக்க வேண்டும்…
அல்லது ஒன்றுமே தேவையில்லை என முழங்கியவர்….
மகாகவி தாகூரால்...
நேதாஜி எனப் பட்டம் சூட்டப்பட்டவர்…

1938ம் ஆண்டு… நேதாஜி...
இந்திய தேசிய காங்கிரசின் தலைவரானார்..
1939ல் இரண்டாம் முறையும் போட்டியிட்டார்…
நேதாஜியை விரும்பாத காந்திஜி...
அவருக்கு எதிராகப் போட்டியிட...
நேருவையும்... இராஜேந்திரபிரசாத்தையும்...வற்புறுத்தினார்...
ஆனால் அவர்கள் இருவரும்....
அவருக்கு எதிராகப் போட்டியிட மறுத்தனர்….
எனவே காந்தியடிகள் பட்டாபி சீத்தாராமையாவை
நேதாஜிக்கு எதிராக நிறுத்தினார்….
பட்டாபி சீத்தாராமையா தோல்வியுற்றார்….
பட்டாபியின் தோல்வியை தனது பெரும் இழப்பாக
கருதிய காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்….
இந்த நாடகங்களைக் கண்டு மனம் வெறுத்த
நேதாஜி காங்கிரஸ் இயக்கத்தை விட்டு வெளியேறினார்…

1940ம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார்…
1941ம் ஆண்டு சிறையிலிருந்து தப்பித்தார்…
ஆப்கானிஸ்தான் சென்றார்…..
அங்கிருந்து ரஷ்யா சென்றார்…
அங்கிருந்து ஜெர்மன் சென்றார்…
ஹிட்லரை சந்தித்தார்…
1941ல் சுதந்திர இந்திய மையம் தொடங்கினார்…
சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் தொடங்கினார்..
1943ல் சிங்கப்பூரில்….
இந்திய தேசிய சுதந்திரக் கொடியை ஏற்றினார்…
சுதந்திர இந்தியா என்று பிரகடனம் செய்தார்…

1944ல் இந்திய தேசிய இராணுவப்படைக்கு தலைமையேற்று
ஆங்கிலேயரைப் போர்க்களத்தில் சந்தித்தார்…
தோல்வி அடைந்த போதும் சோர்ந்து விடாமல் செயல்பட்டார்.
இந்தியாவை அடக்கி வைக்கும் ஆற்றல் எவருக்குமே இல்லை…
நமது தேசம் விடுதலை அடைந்தே தீரும்  என
1945 ஆகஸ்ட் 15 வானொலியில் வீர முழக்கம் செய்தார்….

அவரது தீர்க்க தரிசனம் மிகச்சரியாக நடந்தேறியது..
1947 ஆகஸ்ட் 15 நமது தேசம் விடுதலை அடைந்தது..
1945 ஆகஸ்ட் 18 விமானத்தில் பயணித்த போது…
பர்மோசா தீவுக்கருகே அவரது விமானம் விபத்துக்குள்ளாகி
நேதாஜி இறந்தார் என ஜப்பான் அரசு அறிவித்தது…
இன்று வரை அவரது மரணம் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது…
அவரது தியாகம் அளப்பரியது…. ஒப்பிட முடியாதது…
இரத்தம் சிந்தி இந்திய தேச விடுதலைக்குப் பாடுபட்ட
வீரத்திருமகன் நேதாஜியை என்றும் நினைவு கூர்வோம்…
வாழ்க. அவரது புகழ்…. வளர்க அவரது புகழ்…

நன்றி: காரைக்குடி இணையதளம் 

Tuesday, August 15, 2017

தேசம் காப்போம்!
 சுதந்திர தின வாழ்த்துக்கள் 



இதோ… நாடு விடுதலை அடைந்து

71 ஆண்டுகள் ஆகிவிட்டன….

நேருவின் கனவுகள்

கனவுகளாகவே போய்விட்டன….

விழித்தெழுந்த ஒரு தேசம்….

இதோ மீண்டும் வீழ்ந்து விட்டது

வீழ்வேனென்று நினைத்தாயோ?

என பாரதி அன்று பாடினான்

இந்திய தேசமே

வீழ்ந்திடாதே… விழித்தெழு….

கண்ணீரைத்துடைத்திடு

கனவுகளை… நனவுகளாக்கு

உன் ஆன்மாவின் மவுனம் கலைத்திடு

அனைவருக்கும் 

விடுதலைத் திருநாள் 


நல்வாழ்த்துக்கள்..

Thursday, August 10, 2017


மத்திய தொழிற்சங்கங்களின் தேசிய தொழிலாளர் கருத்தரங்கம்


     தொழிலாளர்களின் 12 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 08/08/2017 அன்று மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலின்படி அனைத்து தொழிற்சங்க கருத்தரங்கம்  டெல்லியில் தல்கடோரா விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. NFTE சார்பாக பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர் சிங் அவர்களின் தலைமையில் ஏறத்தாழ 30 தோழர்கள் கலந்து கொண்டனர்.தமிழகத்திலிருந்து மாநிலச்செயலர் தோழர்.நடராஜன்மாநிலத்தலைவர் தோழர்.காமராஜ், STR மாநிலச்செயலர் தோழர்.அன்பழகன்ஆகியோர் கலந்து கொண்டனர்.


கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

12 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி...

நாடு முழுக்க அனைத்து மட்டங்களிலும் கோரிக்கைகள் விளக்கவுரை மற்றும் பரப்புரை. நவம்பர் 9,10 மற்றும் 11 தேதிகளில் டெல்லியில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் மூன்று நாட்கள் தொடர் தர்ணா. இறுதியாக காலவரையற்ற நாடு தழுவிய வேலை நிறுத்தம்.

 தோழர்களே… தயாராவீர்