Total Pageviews

Tuesday, October 31, 2017


வாழ்க....வளமுடன்.....நலமுடன்........


S.ஜெயவாசுகி, AOS,
CSC தல்லாகுளம், மதுரை.


R.பாலசுப்ரமணியன், TELECOM TECHNICIAN
தெப்பகுளம், மதுரை.

A.ஜெயராம், TELECOM TECHNICIAN
 திண்டுக்கல்.

  K. குமரேசன், TELECOM TECHNICIAN
சமயநல்லூர்.

A. மீனாம்பாள் , TELECOM TECHNICIAN
PGM அலுவலகம், மதுரை.

S. முருகன், TELECOM TECHNICIAN,
சின்னாளப்பட்டி,

பத்மஸ்ரீதரன்,  Office Superintendent,
  கூடல்நகர், மதுரை.

மதுரை மாவட்டத்தில் 31.10.2017 அன்று

பணிநிறைவு பெறும்

தோழர்கள், தோழியர்களை


 அன்போடு வாழ்த்துகிறோம்.

Friday, October 27, 2017


மா[ரி]றிப்போனது மதுரை
 பேச்சுவார்த்தையால் அமைதி நிலை 

24/10/2017 அன்று மதுரைப் பொதுமேலாளர் 
அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் 
திட்டமிடப்பட்டிருந்தது.  உண்ணாவிரதம் துவங்கும் 
முன்பே மதுரை துணைப்பொதுமேலாளர் 
திரு.சந்திரசேகரன் அவர்கள் தோழர்களை சந்தித்து 

25/10/2017 அன்று BSNLEU – NFTE இணைந்த 
பேச்சுவார்த்தையை மாவட்ட நிர்வாகம் 
நடத்தவிருப்பதாகவும், பிரச்சினைகள் சுமுகமாக 
தீர்க்கப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும் 
எழுத்துப்பூர்வமாகவும் வேண்டுகோள் விடுத்தார்
எனவே மதுரைப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

மதுரை மாவட்ட நிர்வாகத்தின்  ஆக்கப்பூர்வமான 
அணுகுமுறைக்கு
நமது நன்றி.

பல்வேறு மாவட்டங்களிலும் வந்திருந்து 
போராட்டத்திற்கு ஆதரவு நல்கிய 
முன்னணித்தோழர்களுக்கும் நமது நன்றி.

25.10.2017  அன்று பேச்சுவார்த்தையில்

BSNLEU சங்கத்தின் சார்பாக   மாவட்ட 

செயலர் தோழர். செல்வின் சத்யராஜ்,

 மாநில நிர்வாகி தோழர். பழனிகுமார், மற்றும்

BSNLEU மாவட்ட தலைவர் கலந்துகொண்டனர்.  

NFTE-BSNL சங்கத்தின்  சார்பாக 

 மாவட்ட தலைவர். தோழர். சிவகுருநாதன்,  

மாவட்ட செயலர் தோழர். ராஜேந்திரன், 

மாவட்ட உதவி 

தலைவர். தோழர். விஜயரங்கன், 

மாவட்ட அமைப்பு செயலர். தோழர். வேலுச்சாமி 

மாநில அமைப்பு செயலர். 

தோழர். க.சுபேதார் அலிகான், 

காரைக்குடி மாவட்ட செயலர். தோழர். வெ.மாரி, 

கலந்துகொண்டனர்

ஆக்கப்பூர்வமான முறையில் நடைபெற்று அமைதிவழியில் 

பிரச்சினைகளில் முடிவு எட்டப்பட்டது. அமைதி வழியில் 

பேச்சுவார்த்தை நடத்திய மதுரை மாவட்ட 

நிர்வாகத்திற்க்கும்,   

பேச்சுவார்த்தைக்கு  உறுதுணையாக இருந்த காரைக்குடி 

மாவட்ட செயலர்  தோழர். வெ.மாரி, மற்றும் 

மாநிலசங்கத்திற்கும் மாநில நிர்வாகத்திற்க்கும் நமது நன்றி.

Monday, October 23, 2017


மதுரை மாவட்டத்தின்

ஒருதலைப்பட்ச...

நிர்வாக நடைமுறையை எதிர்த்து

பாரபட்ச அணுகுமுறையைக் கண்டித்து

மதுரைப் பொதுமேலாளர்

அலுவலகம் முன்பாக


24/10/2017 - செவ்வாய்  காலை 10.00 மணி  முதல்


காலவரையற்ற

உண்ணாவிரதப்போராட்டம்

மாநிலச்சங்க நிர்வாகிகள்...

தென்பகுதி மாவட்ட  செயலர்கள்....

மற்றும் முன்னணித் தோழர்கள்...

பங்கேற்பு...




நீதியை...  நியாயத்தை...

நிலை நிறுத்துவோம்...


உணர்வோடு... உறுதியோடு...

வாரீர்…. தோழர்களே



Wednesday, October 18, 2017

இனிய தீபாவளி
 நல் வாழ்த்துக்கள் 

 america fireworks 4th of july GIF


Thursday, October 12, 2017


NFTE, BSNLEU, SNEA, AIBSNLEA, FNTO, AIGETOA, SEWA - BSNL, BSNLMS, BSNLOA, ATM ,
TOA BSNL,  
அனைத்து சங்க கூட்டம்

3-வது ஊதிய மாற்ற பிரச்சனைக்கு தீர்வு காணவும்.,

துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்தவும்.,

விவாதித்து., நல்ல முடிவு எடுப்பதற்காக., அனைத்து

சங்க கூட்டம் 04-10-2017 அன்று டெல்லியில்.,

NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.


     
 நடைபெற்ற கூட்டத்தில்., NFTE, BSNLEU, SNEA, 

AIBSNLEA, FNTO, AIGETOA, SEWA - BSNL, BSNLMS, BSNLOA, 

ATM மற்றும் TOA BSNL ஆகிய சங்கங்களின் பொதுச் 

செயலர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

26-09-2017 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையின்

தொடர்ச்சியாக நடைபெற்ற இக் கூட்டத்தில் 3-வது ஊதிய

மாற்றம் மற்றும் துணை டவர் நிறுவனம் தொடர்பாக 

அனைத்து சங்க பிரதிநிதிகளின் கருத்து பதிவு மற்றும் 

தீவிர ஆலோசனைக்கு பிறகு கீழ்க்கண்ட...!

முடுவுகள் எடுக்கப்பட்டது.



இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

ஊதிய மாற்றம் மற்றும் 

துணை டவர் நிறுவனம் உள்ளிட்ட 

பொதுவான பிரச்சனைகளுக்காக.

பிரச்சனைகளின் தீர்விற்காக போராட்டங்களை நடத்த.

இனி "ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL" என்ற 

பதாகையின் கீழ் செயல்படுவது.

         BSNL நிறுவனத்திற்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் 

கொடுக்கும் அனைத்து அறிவிப்பு மற்றும் மகஜர்களில் ALL 

UNIONS AND ASSOCIATIONS OF BSNL அமைப்பில் உள்ள 

அனைத்து பொது செயலர்களும் கையெழுத்து இடுவது.


                        01-01-2017 முதல் சிறப்பான ஊதிய மாற்றத்தை 

பெற்றிடவும்., 2-வது ஊதியக்குழுவில் தீர்வு காணாத 

நேரடி    நியமன ஊழியர்களின் ஓய்வூதிய பிரச்சனைகள் 

உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிடவும், துணை 

டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சியை தடுத்திடவும் 

கீழ்க்கண்ட போராட்ட இயக்கங்கள் நடத்தப்படும்.

  • 16-10-2017 அன்று மத்திய, மாநில மற்றும் மாவட்ட 

   தலைநகர் () தலைமை அலுவலகம் முன்பாக 
   ஆர்ப்பாட்டம் நடத்துவது.

  • 15-11-2017-க்குள் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை மகஜர் கொடுப்பது.

  • 16-11-2017 அன்று மத்திய, மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவது.

  • 2017 டிசம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நடத்துவது.

     அதன் பின்பும்.,

       பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை
  எனில் 
    
    காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்துவது.

    ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL அமைப்பின்...
  
  அடுத்த கூட்டம் 23-10-2017 அன்று காலை 11-00 மணிக்கு 
  
       BSNLMS அலுவலகத்தில் நடைபெறும்.